தில்லியில் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற் கொண்டு வருகின்றன. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது, மக்கள் கூடும் விதமாக நடைபெறும் அனைத்து கூட்டமைப்புகள், நிகழ்வுகள், மாநாடு கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்த மறு அறிவிப்பு வரும் வரை தில்லியில் தடை விதிக்கப்படுகிறது. மக்கள் அதிக ளவில் கூடும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக் கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.