தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி-20 தொடரின் 4-வது சீசன் வெள்ளியன்று தொடங்கியது. 6-வது லீக் ஆட்டத்தில் சென்னை - திருச்சி அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, சென்னை வீரர் அலெக்சாண்டரின் மிரட்டலான பந்துவீச்சை தாக்குபிடிக்கப் முடியாமல் திணறியது. தொடக்கத்திலேயே தனது அதிரடியை ஆரம்பித்த அலெக்சாண்டர் மிடில் ஆர்டரை நடுங்க வைத்தது மட்டுமல்லாமல் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி திருச்சியை 107 ரன்களில் சுருள வைத்தார். அதுமட்டு மல்லாமல் 4 ஓவர் வீசி 9 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி டிஎன்பிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அலெக்சாண்டர் சுழலிலும் ஸ்விங், பவுன்சர் வீசிவருவதால் தொடரில் விளையாடி வரும் மற்ற அணிகள் இவரைக் கண்டால் நடுங்கிவருகின்றனர்.