tamilnadu

img

1,000 ரன்கள், 100 விக்கெட்டுகள் புதிய வரலாறு படைத்த ஆஸி., வீராங்கனை

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மகளிர் ஆஷஸ் தொடரில் தற்போது டி-20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன.  3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் கவுன்டியில் ஞாயிறன்று  நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி  கேப்டன் லான்னிங் (43), எல்லிஸ் பெர்ரி (47) ஜோடியின் நிதான ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

நடப்பாண்டில் முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி டி-20 போட்டிகளில் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.   இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் ஆடவர் பிரிவில் கூட எந்த ஒரு வீரரும் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை டி-20 போட்டிகளில் இதுவரை வீழ்த்தியதில்லை. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி (1416 ரன்கள், 98 விக்கெட்டுகள்), வங்கதேச  ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் - ஹாசன் (1471 ரன்கள், 88 விக்கெட்டுகள்) ஆகியோர் முத லிரண்டு இடங்களில் இருந்தனர். இவர்களை யெல்லாம் பின்னுக்குத்தள்ளிய எல்லிஸ் பெர்ரி சரித்திரத்தின் சுவையை ருசித்துள் ளார்.   ஆடவர் பிரிவில் படைக்க முடியாத சாதனை மகளிர் பிரிவில் படைத்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.