மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புச் சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து தொடர் (15-25 வயதுக்குட்பட்ட வர்கள்) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கு கிறது. மூன்று நாட்கள் (6-ஆம் தேதி வரை) நடைபெறும் இந்த தொடரில் பாகிஸ்தான், சீனா, மலேசியா உள்ளிட்ட 15 நாடுகள் பங்கேற்கின்றன. ஆடவர் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 8 அணிகள் என மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. வியாழனன்று சென்னை நுங்கம்பாக்க த்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் இதற்கான ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சி நடை பெற்றது. நடிகர் அருண்விஜய் ஜோதி ஏற்றி போட்டிக்கான ஏற்பாடுகளைத் துவக்கி வைத்தார். சனியன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ, இசையமைப்பாளர் இளையராஜா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டு ஆர்வலர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் உட்படப் பலர் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.