ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் கால்பந்து அணி யான ரியல் மாட்ரிட் அணியிலிருந்து நட் சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் ஆகியோர் வெளியேறிய பின் அணி தடுமாற ஆரம்பித்தது.இதனால் ஷினேடின் ஷிடேனை மீண்டும் பயிற்சியாளராக நியமித்தும் அணியை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியவில்லை.தற்போது 2019-20 சீசனுக்கான வீரர்கள் டிரான்ஸ்பர் பணி தொடங்கியுள்ளது. ரியல் மாட்ரிட் மீண்டும் சிறப்பான அணியாகக் கட்டமைக்க 14 வீரர்களை வெளியேற்ற அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்த 14 வீரர்களில் காரேத் பலே, ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், கெய்லர் நவாஸ் ஆகியோர் முன் வரிசையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.