மலேசியாவில் நடந்த ஆசிய குவாஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சௌரவ் கோசல் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் தனிநபர் ஒற்றையர் பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஆசிய குவாஸ் சாம்பியன்ஷிப்(Asian squash championships) போட்டிகள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றன. இதில் தனிநபர் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய குவாஸ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா தங்கப்பதக்கத்தை வென்றார். இவர் ஹாங்காங் நாட்டு வீராங்கனை ஏனி அவ்வை 11-5, 8-11, 11-6, 11-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
இதைத்தொடர்ந்து நடந்த தனிநபர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சௌரவ் கோசல் ஹாங்காங் நாட்டு வீரர் லியோ அவ் சன் மிங்கை 11-9, 11-2, 11-8 என்ற செட் கணக்கில் வென்று பதக்கத்தை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து நடந்த தனிநபர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சௌரவ் கோசல் ஹாங்காங் நாட்டு வீரர் லியோ அவ் சன் மிங்கை 11-9, 11-2, 11-8 என்ற செட் கணக்கில் வென்று பதக்கத்தை கைப்பற்றினார்.