உலகக்கோப்பை ஆட்டங்களில் இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் விளையாடும் ஆட்டங்களுக்கு மட்டும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஐசிசி இந்த இரண்டு நாடுகள் விளையாடும் ஆட்டங்களுக்கு மட்டும் தனி விலையுடன் டிக்கெட்டு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் ஆட்டத்திற்கான டிக்கெட்டின் விலை ஜெட் வேகத்தில் எகிறியுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி பாக்ஸில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.4 லட்சம் தருகிறோம் டிக்கெட் கொடுங்கள் என ரசிகர்கள் நச்சரித்துள்ளனர். இதே போலச் சாதாரண விலையிலான டிக்கெட்டுகள் 3 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் மூன்று நாட்களுக்கு முன்பே தீர்ந்துவிட்டது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் டிக்கெட் விலை தொடர்பான தகவல்கள் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் இந்த ஒரு போட்டியில் ஐசிசி தனது கல்லாப்பெட்டியை நிறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.