tamilnadu

img

களத்திற்கு வராத ரொனால்டோ வழக்கு தொடர தயாராகும் ரசிகர்கள்

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலி கிளப் அணியான ஜூவெண்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.  தென் கொரியா நாட்டின் கிளப் அணி யுடனான நட்புறவு ஆட்டத்தில் பங்கேற்க ஜூவெண்டஸ் அணி சியோல் சென்று கே லீக்  ஆல் ஸ்டார் அணியை எதிர்கொண்டது. ரொனால்டோ பங்கேற்பதால் டிக்கெட் விலைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. டிக்கெட் விலை 4,00,000 வான் (ரூ. 23,315) வரை விற்பனை யானது. செலவை பற்றிக் கண்டுகொள்ளாத தென்  கொரிய கால்பந்து ரசிகர்கள் ரொனால்டோவின் தந்திர ஆட்டத்தைக் காண 65,000 பேர் மைதானத்தில் திரண்டனர். ஆனால் ரொனால்டோ விளையாட விருப்பம் இல்லை எனக் கூறி பெஞ்சில் அமர்ந்துவிட்டார். இதனை சற்று எதிர்பாராத ரசிகர்கள் கூச்சலிட்டனர்.  ஆட்டம் முடிந்த பின் விரக்தியுடன் வந்த ரசிகர்கள் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த ஸ்போர்ட்ஸ் ஏஜென்சியிடம் இழப்பீடு தொகை கேட்டனர். அந்த நிறுவனம் மறுக்கவே 2000 பேர்  கூட்டாக வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள் ளனர். விளையாடாமல் 65,000  பேரை ஏமாற்றிய ரொனால்டோ சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.