குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல், 2020 டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான ஆசிய தகுதிச் சுற்று நடைபெற்று வருகிறது.இதில் இன்று ஆண்களுக்கான 52 கிலோ எடைபிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அமித் பங்கல், பிலிப்பைன்சின் புகிலிஸ்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் 4-1 என அமித் பங்கல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
அதேபோல், பெண்களுக்கான 75 கிலோ எடைபிரிவில் சாக்ஷி சவுத்ரி காலிறுதி ஆட்டத்தில் கொரியாவைச் சேர்ந்த இம் ஏஜி-யை எதிர்கொண்டார். இதில் 0-5 என சாக்ஷி சவுத்ரி தோல்வியடைந்தார்.