tamilnadu

img

நிபந்தனையின்றி அனைவருக்கும் நிவாரணம்: கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஆக. 10- தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை 2 ஆயிரம் ரூபாய் அனைத்து கைத்தறி நெசவாளர்களும்  கிடைக்கும் வகையில் உத்தரவிடக்கோரி திங்களன்று (ஆக.10) காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக கைத்தறி தொழில் கடந்த ஆறு மாத காலமாக முடங்கியிருக்கிறது. தனியார் நிறுவனங்களில் துணிகள் விற்பனை இல்லாததால் கூட்டுறவுச்  சங்கங்களில் துணிகள்  தேங்கி கிடக்கிறது. இதனால் நெசவாளர்க ளுக்கு வேலை இன்றி, வருமானம் இல்லாமல் உள்ளனர். தமிழக அரசு நெசவாளர்களுக்கு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நெசவாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இந்நிலையில், நெசவாளர்கள் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும், நிவாரண தொகை 7500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் இ. முத்துகுமார் உள்ளிட்டோர் பேசினர்.