tamilnadu

காஞ்சிபுரத்தில்  தையல் கலைஞர்கள் சங்க கிளை உதயம்

காஞ்சிபுரம், மார்ச் 3- காஞ்சிபுரத்தில் தையல் கலைஞர்கள்  சம்மேளன கிளை ஞாயிறன்று துவக்கப்பட்டது.இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜீ.வசந்தா தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் மார்ட்டின் வரவேற்றார். ஆர்.சவுந்தரி, ஜே.பாக்கியலட்சுமி, எச்.ஜான் வெஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், தையல் கலைஞர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் பி. சண்முகம் கலந்து கொண்டனர். நிர்வாகிகள்: கிளைத் தலைவராக என்.மணிவண்ணன், செயலாளராக எச்.ஜேம்ஸ் மார்ட்டின், பொருளாளராக ஆர்.சவுந்தரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;