காஞ்சிபுரம், ஆக.6- காஞ்சிபுரம் நகரப்பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் விழா கடந்த ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த விழாவை காண லட்சக்கணக்கான வெளியூர் மக்கள் காஞ்சிபுரம் நகரப்பகு திக்கு வந்து செல்கின்றனர். இதனால், நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்திவரதர் விழாவுக்காக காஞ்சி நகரப்பகுதியில் உள்ள பள்ளிகள் மேற்கண்ட 48 நாட்களுக்கு காலை 8:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணிவரை மட்டுமே செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், பி.எம்.எஸ் பெண்கள் மேல்நிலை பள்ளிக்குச் செல்லும் சாலை வழியாக கோவிலுக்கு வருபவர்களை அனுமதிக்கிறார்கள். இதனால் மாணவர்கள் கடும் அவதிப்படு கின்றனர். மேலும், பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் போக்கு வரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதனால் மாணவர்கள் வீட்டிற்கு செல்ல அதிக நேரம் ஆகிறது. காலையில் பள்ளி செல்வதிலிருந்து மீண்டும் வீடு திரும்புவது வரை பள்ளி மாணவர்கள் பேருந்து நெரிசலால் மாட்டி க்கொள்கிறார்கள். இப்படி பல்வேறு இன்னல்களுக்கு மாணவர்கள் ஆளாகி வருகின்றனர். ரயில் மறியல் அத்திவரதர் திருவிழாவிற்காகச் சென்னை, செங்கல்பட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களை இயக்குவதற்காக நாள்தோறும் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகவும் நேரங்களை மாற்றியும் இயக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் செவ்வாயன்று (ஆக.6) அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில் அத்திவரதர் சிறப்பு ரயிலுக்காக பாலுர் ரயில் நிலையத்தில் 30 நிமிடத்தி ற்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டு ள்ளது. இதனால் பள்ளி கல்லூரி, மருத்து வமனை, வேலைக்கு சென்றவர்கள் அவதிப்பட்டனர். இப்படி தான் தினமும் நடைபெறு கிறது எனக் கூறி ரயில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.