காஞ்சிபுரம்:
கொரோனா விதிகளை மீறி, காஞ்சி. காமாட்சி அம்மன் கோயிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். இதனால் பக்தர்களும், பொதுமக்களும் அதிருப்தியடைந்தனர்.
பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். அரசு அனுமதித்த தரிசன நேரம் முடிந்த பிறகு 15 நிமிடம் தாமதமாக கோயிலுக்கு வந்த அவர், 30க்கும் மேற்பட்ட தொண் டர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறி, சாமி தரிசனம் செய்தார்.முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது தொண்டர்களுடன் கொரோனா விதிமீறி கோயிலில் தரிசனம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.