tamilnadu

img

நடைபாதையில் பள்ளம்: மக்கள் அவதி

காஞ்சிபுரம், மே 27-காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர், ராஜீவ் காந்தி நினைவகம் மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகள் நிறைந்துள்ள பகுதியாகும். மேலும் பல கல்லூரிகள்உள்ளன. இதனால் இப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.திருப்பெரும்புதூரை சுற்றி பல இடங்களில்  மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. பிறகு கால்வாய் மீது நடைபாதை கட்டப்பட்டது. இந்நிலையில், அந்த மழைநீர் கால்வாய் மூடிகள்பல இடங்களில் உடைந்துள்ளன. இதை தெரியாமல் அவ்வழியாக வருபவர்களில் பலர்அந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்துள்ளனர். இதே நிலைதான், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் செல்லும் கால்வாய் வரை உள்ளது.இரவு நேரங்களில் சாலை ஓரமாக நடக்காமல், பொதுமக்கள் கால்வாய் மீது நடப்பதால் அடிக்கடி பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். இதனால் பலருக்கு காயங்கள் ஏற்படுகின்றன.இது குறித்து திருப்பெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.