tamilnadu

மடிக்கணினி வழங்கப்படாமல் அலைகழிப்பு

காஞ்சிபுரம், மார்ச் 16 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (மார்ச் 16)நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில்,  அரசுப் பள்ளிகளில் படித்த மாணவி கள் 16 பேருக்கு மடிக்கணினி வழங்க  வேண்டும் என மனு கொடுத்தனர். அந்த மனுவில், தாங்கள் காஞ்சி புரம் நகரில்  அரசு பள்ளிகளில் படித்  தவர்கள் என்றும், தாங்கள் ஏழைக்  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்  றும், தங்களுக்கு இலவச மடிக் கணினி வழங்கி கல்வி பயில உதவ வேண்டும் என்றும், தாங்கள் டிப்ளமோ படிப்பதை காரணம் கூறி  மடிக்கணினி வழங்காமல் நிறுத்தப்  பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக  பலமுறை மனு அளித்தும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை என் றும் புகார் தெரிவித்தனர். இது குறித்து ஆட்சியர்  விசாரித்து உரிய நட வடிக்கை எடுப்பதாக கூறினார்.