tamilnadu

img

மதுராந்தகம் ஏரியை தூர் வார கோட்டாட்சியரிடம் மனு

மதுராந்தகம்,ஜூலை 29-  மதுராந்தகம் ஏரியை உடனடியாக தூர் வார வலியுறுத்தி ஏரி பாதுகாப்புக் குழுவினர் பேரணியாகச் சென்று கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட த்தில் உள்ள மிகப் பெரிய ஐந்து ஏரிகளில் மதுராந்த கம் ஏரியும் ஒன்று. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 5 மதகுகளும்,  6 கலிங்கல்களும் உடையது. இந்த ஏரியின் மூலம் 1154.88 ஹெக்டேர்  நிலங்கள்  பாசன வசதி பெறுகின்றன. 694 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி 976 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி தண்ணீர் விவசாயத்திற்கு மட்டுமன்றி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிதண்ணீர் ஆதாரமாகவும் உள்ளது.  கடந்த 5 ஆண்டு களுக்கும் மேலாக தூர்வார ப்படாததால் ஏரியில் வண்டல் மண் படிந்து கொள்ளளவு வெகுவாக குறைந்துள்ளது. எனவே ஏரியை தூர் வார வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் மதுராந்த கம் ஏரியை உடனடியாக தூர்வார வேண்டும், ஏரி நீர் செல்லும் கிளி ஆற்றுப்பகுதி யில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு  முன்முயற்சியில் மதுராந்தகம் ஏரி பாது காப்புக்குழு அமைக்கப்ப ட்டது. இதனைத் தொடர்ந்து இந்தக்குழு மதுராந்தகம் நகரத்தில் மக்களைச் சந்தித்து ஒரு மாதம் கையெழுத்து இயக்கம் நடத்தியது. இந்நிலையில் ஏரிப் பாதுகாப்பு குழுவினர் மதுராந்தகம் பேருந்து நிலையத்திலிருந்து  பேரணியாகச் சென்று பொதுப்பணித் துறை அலு வலகத்தை முற்றுகையிட்ட னர். இதனைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாள ரிடம் கையெழுத்து பிரதிகளு டன் கோரிக்கை மனுவை வழங்கினர்.  கோட்டாட்சியர் மாலதியிடமும் கோரிக்கை மனுக்களை வழங்கினார்.  இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். மதுராந்தகம் ஏரி நகர் அரிமா சங்கம், அரிமா சங்க தொன்மை நகர சங்கம், லாரி உரிமையாளர் சங்கம்,   மோட்டார் வாகன அனைத்து தொழிலாளர் சங்கம், வர்த்தகர் சங்கம், இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில காங்கி ரஸ், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.