tamilnadu

img

காஞ்சிபுரம்: அரசுப் பள்ளி குடிநீர் தொட்டி இடித்து அகற்றம்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியை, ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 90 மாணவர்கள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதைப் போன்ற துர்நாற்றம் அடிப்பதாக புகார் எழுந்தது. இதை அடுத்து அப்பள்ளி ஆசிரியர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர் மலம் கலக்கப்பட்டதாக தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் மற்றும் உத்திரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் குடிநீர் தொட்டிக்குள் அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து போட்டிருக்கலாம் என விளக்கம் அளித்திருந்தார். மேலும், அந்த தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்டுவதற்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளியின் குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.