ஆள் மாறாட்டம் செய்து ரூ. 2 கோடி நிலம் விற்பனை: 2 பேர் கைது
காஞ்சிபுரம், பிப்.9- திருக்கழுகுன்றம் அருகே உள்ள வள்ளிபுரம் கிராமத்தில் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட சோனாலிசா என்பவருக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதற்கு காவலாளியாக விஜயகுமார் என்பவரை நியமித்து பராமரித்து வந்தார். செய்யாறு அருகே உள்ள வட்டம் ராந்தம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பெருமாள் என்பவர் திருக்கழுகுன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியான நபரை சோனா லிசா என்று அடையாளம் காட்டி 10 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்த சோனலிசா அதிர்ச்சியடைந்து, காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. அலெக்சாண்டர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் அன்புச்செல்வி விசாரணை நடத்திய போது, சோனலிசாவின் 10 ஏக்கர் நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து ரூ. 2 கோடி வரை விற்பனை செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து வழக்கறிஞர் பெருமாள், அவருக்கு உடந்தையாக இருந்த காவலாளி விஜயகுமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான வழக்கறிஞர் பெருமாள் ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு ரெட்டியப்பா ரெட்டி என்பவரின் 7.5 ஏக்கர் நிலத்தையும், 2017-ல் சேகர் என்பவரின் 2.5 ஏக்கர் நிலத்தை யும், பாலு என்பவரின் 3.5 ஏக்கர் நிலத்தையும் மோசடி செய்ததற்காக சிறைக்கு சென்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
நகை-பணம் கொள்ளை
திருவள்ளூர், பிப்.9- திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் காந்தி தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். சென்னை ஆர்.கே.நகரில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் உதவி பயிற்சியாளராக பணி யற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வியாழனன்று குடியேறினார். புதுவீட்டில் இன்னும் பொருட்கள் முழுமையாக வைக்காததால் சனிக்கிழமை இரவு பழைய வீட்டிலேயே குடும்பத்துடன் தங்கினர். இந்நிலையில் நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் ஜெகதீசின் புதிய வீட்டு ஜன்னல் கண்ணா டியை உடைத்து உள்ளே சென்று 5 பவுன் நகை, ரூ. 28 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பின்னர் காலையில் ஜெகதீஷ் புதிய வீட்டுக்கு வந்த போது நகை-பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி யடைந்தார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
சென்னை,பிப்.9- பொன்னேரியை அடுத்த கோளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (23). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வெறுப்பு அடைந்த சாந்தகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தாக கூறப்படுகிறது. அதேபோல், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் இர்பான் ஷாகித் (35) மீஞ்சூரில் தங்கி அத்திப்பட்டு புதுநகரில் உள்ள துறை முகத்தில் வேலை செய்து வந்தார். அவர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துகாவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.