tamilnadu

img

வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம், டிச.18 - காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து புதன்கிழமையன்று (டிச. 18) பா.பொன்னையா தலைமை யில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். வாலாஜாபாத் பேருந்து நிலையம்,  வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவல கம்,வெள்ளேரி அம்மன் கோவில் பகுதி, செங்க ல்பட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த னர். அப்போது, வாலா ஜாபாத்  பேருந்து நிலையம் அருகே  போக்குவரத்து நெரி சல் அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தை இட மாற்றம் செய்ய வேண்டும், பேருந்து நிலைய பகுதி களில் உள்ள ஆக்கிர மிப்புகளையும், செங்க ல்பட்டு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்ற வேண்டும், கழிவு நீர் கால்வாய்களை  மூட வேண்டும் என அதிகாரி களிடம் ஆட்சியர் கூறினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலு வலர் ஸ்ரீதர், சார் ஆட்சியர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

;