tamilnadu

கொரோனா வைரஸ் தடுப்பு ஆலை நிர்வாகிகளுடன் ஆலோசனை

காஞ்சிபுரம்,மார்ச் 19- காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துவத் துறை சார்பாக கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்  றும் விழிப்புணர்வு குறித்து  காஞ்சிபுரம் மாவட்ட தொழிற் சாலை பிரதிநிகளுடனான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்  சியர் பொன்னையா தலை மையில்  நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தி லுள்ள தொழிற்சாலைகளில் இருந்து தொழிற்சாலை பிரதி நிதிகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் சுமார் 250க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு அன்றாடம் வரும் பணியா ளர்கள் அனைவருக்கும் கை கழுவும் திரவத்தினை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளும் முறை குறித்து அறிவுறுத்தவும், தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சாலைகளில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்  படுத்தும் பணிகள் மேற்  கொள்ளவும், தொழிற்சாலை களில் அன்றாடம் பயன்ப டுத்தும் தொழில்நுட்ப கருவி களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைபடுத்தவும் தெரி விக்கப்பட்டது. மேலும் தொழிற்சாலை யில் உள்ள உணவகங்கள், கலந்தாய்வுக் கூடங்கள் மற்றும் பணியாற்றும் இடங்  களில் கூட்டம் கூடுவதை  தவிர்க்கவும் தெரிவிக்கப் பட்டது. கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பணி யாளர்களிடமிருந்து புகார் களை பெற மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் செயல்ப டும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 044-27237107 / 044-27237207-னை தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் பொன் னையா தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தர மூர்த்தி, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ரவிச் சந்திரன், சுற்றுச்சூழல் ஆய்  வாளர் சசிகுமார்,  மருத்து வப் பணிகள் இணை இயக்கு னர் ஜீவா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பழனி, உள்ளிட்ட அரசு அலுவலர்  கள் பலர் கலந்துகொண்ட னர்.