மதுராந்தகம்,ஜூலை 21- அரசாணை 56 உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. இச் சங்கத்தின் இரண்டாவது மாவட்ட மாநாடு மதுராந்தகத்தில் மாவட்டத் தலைவர் சாரங்கன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் செல்வம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மது ராந்தகம் மாவட்டத் தலைவர் வி.பொன்னு சாமி வரவேற்றார். தமிழ்நாடு சமூக நலத் துறை பணியாளர் சங்க மாநில பொறுப்பாளர் எம்.பி.திலகம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஒய். சீதாராமன் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் ஆர்.சுப்பிரமணியம் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முகமது உசேன், மாவட்டத் தலைவர் வெ.லெனின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி மாநாட்டை நிறைவு செய்து பேசினார் ஜெகதீசன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகையினை உடனடி யாக வழங்க வேண்டும், அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ. 7500 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக என்.சாரங்கன், செயலாளர் ஒய்.சீதாராமன், பொருளாளராக சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.