tamilnadu

img

சாம்சங் தொழிலாளார்கள் போராட்டம் குறித்து கூட்டணித் தலைவர்கள் பேட்டி

காஞ்சிபுரம்,அக்டோபர்.09- சாம்சங் தொழிலளர்களை நேரில் சந்தித்த அதரவு தெரிவித்த பின் கூட்டணி கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்:
அரசாங்கம் நினைத்தால் சங்கத்தை உடனடியாக பதிவு செய்ய முடியும் ஆனால் சங்கத்தை பதிவு செய்வதில் என்ன தயக்கம் இருக்கிறது. வருகின்ற காலங்களில் சங்கம் பதிவு செய்யப்பட்டு, பேச்சுவார்த்தை சங்கத்தின் மூலம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். 
சாம்சங் நிர்வாகத்திற்கு நாங்கள் எதிராக இல்லை அவர்களின், அடக்குமுறை போக்கிற்கு எதிராக இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனத்தை எதிர்க்கவில்லை அவர்கள் தொழிலாளர்களை சுரண்டுவதை எதிர்த்தோம். என பேட்டியளித்துள்ளார். 
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அரசாங்கத்திற்கு அவப்பேரை உண்டாக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பந்தலை பிரித்து எடுக்க வேண்டிய காரணம் என்ன ? காவல்துறையின் போக்கு நல்லதல்ல
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் நிர்வாகத்தின் எடுபுடியாக இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு விரோதமாக இருப்பது ஆரோக்கியமானது அல்ல. விரைவில் இன்றோ நாளையோ முதலமைச்சரை நேரில் சந்தித்து, சுமுகமாக இந்த போராட்டத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்
சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்:
சங்கம் தேவை என்பது இன்று நேற்று உருவானது அல்ல, வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த போது கூட சங்கம் வைக்கும் உரிமை இருந்தது. சங்கம் வைக்கும் உரிமை சட்டப்பூர்வமானது
ஊழியர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பாதுகாத்துக் கொள்ள, ஒரு அமைப்பு வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்கள். 16 ஆண்டு காலமாக அந்த நிறுவனம் அவர்களுக்கு தேவையானதை செய்திருந்தால் சங்கம் வைத்திருக்க மாட்டார்கள். என கூறியுள்ளார்