உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் 30இல் ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும், 96ம் ஆண்டு முதல் தபால்கார ஓய்வூதியதாரர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் கே. விஜயகுமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் சேனாதிபதி ஏகாம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.