ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கியதில் 3 பேர் பலியாகினர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே கேளிக்கை விடுதி ஒன்றில் இன்று காலை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியது. இந்த விபத்தில் சுத்தம் செய்யும் பணியில் இருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கழிவு நீர் தொட்டியிலிருந்து சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.