tamilnadu

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

 செஞ்சி தலித் இளைஞர் சக்திவேல் படுகொலையை கண்டித்தும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சசிகலா என்ற தலித் பெண் அடித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்,  குற்றவாளிகள் மீது தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று (பிப்.20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.ராஜா தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் மூ.கந்தசாமி, ப.செல்வன், மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் இரா.பூமாலை மற்றும் சகோதர அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.