கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட முக்கிய நகரான ரிஷிவந்தியம் பகுதி சட்டமன்ற தொகுதி அந்தஸ்து பெற்றது. இந்த தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கும் திமுகவைச் சேர்ந்த வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் கார்த்திகேயனின் மனைவி மற்றும் மகள் உட்பட மூவர் கடலூர் மாவட்டத்தில் உறவினர் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விழாவில் கலந்துகொண்ட மூவருக்கு ஏற்கனெவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது கார்த்திகேயனுக்கும் தொற்று பரவியுள்ளது. தற்போது அவர் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனெவே சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் சேப்பாக்கம் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார். அதிமுக எம்எல்ஏ பழனி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.