கள்ளக்குறிச்சி, ஜூலை 1- கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஜூலை 10ந்தேதி வரை விளைபொருட்கள் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ள தாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகத்தில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு கள்ளக் குறிச்சி, தியாகதுருகம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தவிர்க்க கள்ளக்குறிச்சி வட்ட மார்க்கெட் கமிட்டி மணிலா, எள் வியாபாரிகள் சங்கத்தினர் புதன்கிழமை (ஜூலை 1) முதல் வருகிற 10-ந்தேதி வரை கள்ளக் குறிச்சி மற்றும் தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை கொள்முதல் செய்வதில்லை என அறிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்ப னைக்கூட கண்காணிப்பாளர்களிடம் கடிதமும் கொடுத்துள்ளனர். இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதி காரி ஒருவர் கூறுகையில், கொரோனா அச்சம் காரண மாக வியாபாரிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்ய மாட்டோம் என அறிவித்துள்ளனர். எனவே வரு கிற 13-ந்தேதி முதல் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் முன்பு நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது என்றார்.