கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களிடம் 465 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா ஆகியோர் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.