கள்ளக்குறிச்சி, ஜூலை 29- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்ப டும் 50க்கும் மேற்பட்ட நுண்நிதி நிறுவனங்க ளின் சட்டவிரோத செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்டக்குழு வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஏ.தேவி, செயலாளர் இ.அலமேலு ஆகி யோர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் எல்என்டி, முத்தூட், கிராம சக்தி, டாடா,ஸ்ரீராம், தன்வந்திரி, கிராம விடி யல், ஐசிஐசிஐ, பஜாஜ், இந்துஸ்தான் என 50க்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. கிராமப்புறங்களில் உள்ள ஏராளமான சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் இந்த நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். வங்கிகளில் 9 முதல் 12 விழுக்காடு வட்டி வசூல் செய்யப்படும் நிலையில் இந்த நுண் நிதி நிறுவனங்கள் 25 விழுக்காட்டிற்கு மேல் வட்டி வசூலிக்கும் நிலை உள்ளது. மார்ச் மாதம் வரை முறையாக கடன்களை திருப்பி அளித்து வந்த நிலையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்படும் சூழலில், குறித்த காலத்தில் கடன்களை திருப்பி செலுத்த முடியவில்லை.
கடன் மற்றும் வட்டியை கட்டாயப்ப டுத்தி வசூலிக்கக் கூடாது என அரசு அறி வித்துள்ள நிலையில், பல்வேறு நுண் நிதி நிறு வனங்கள் கட்டாயப்படுத்தி கடன் மற்றும் வட்டித் தொகையை செலுத்த வற்புறுத்து கின்றனர். தொகையை கட்டவில்லை என்றால் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கை முடக்கவோம் என்றும் வேறு எந்த நிறுவனத்தி லும் கடன் பெற முடியாதவாறு செய்துவிடு வோம் என்றும் பெண்களை மிரட்டும் சூழல் நிலவுகிறது. மேலும் கடன் பெற்றுள்ள பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தொகையை கட்டாயப்படுத்தி வசூ லிப்பது அநீதியானது. எனவே மாவட்ட ஆட்சியர் நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். வட்ட அளவில் வருவாய் வட்டாட்சியர், காவல்துறை அலுவலர்கள், மகளிர் குழுக் கள், நுண் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தி சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளை தடுக்க வேண்டும். 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தவணை தொகை வசூலிப்பதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.