tamilnadu

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

மானிய விலையில் காய்கறி விதைகள்
கள்ளக்குறிச்சி. நவ, 21-  கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலைத்துறை மூலம் 2019-20  ஆம் ஆண்டு வீரிய ரக காய்கறி விதைகள் மானிய விலை யில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என அத்துறையின் உதவி இயக்குநர் அறிவித்துள்ளார். ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சியிலுள்ள தோட்டக்கலைத் துறைக்கு 158 ஏக்கர் காய்கறி சாகுபடி இலக்கு வழங்கப்பட்டி ருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மானிய விலையில் வெண்டைக்காய், வெங்காயம், புடலங்காய், பாகற்காய், கத்திரிக்காய் உள்ளிட்ட பல காய்கறி விதைகள் ரூ. 10,000  அளவிற்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்  தின்கீழ் காய்கறி விதைகள் வாங்கி சாகுபடி செய்யும் விவ சாயிகளுக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பில் உரம், பூச்சி மருந்து மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படும். மேலும் சாகுபடி செலவு மேற்கொள்ளப்படும். இதற்கான தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் ஐந்தாயிரம் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்  தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்கள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கள்ளக்குறிச்சியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என; கள்ளக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குனர் சி.வாமலை தெரிவித்துள்ளார். தொடர்புக்கு தொலைபேசி எண் 04151-225022.

தீபவிழா ஆட்டோ கட்டணம் நிர்ணயம்
திருவண்ணாமலை,நவ.21- திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி ஆட்டோ கட்டணம் புதிதாக நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம்  முதல் அரசு கலை கல்லூரி மைதானம் வரை (பெரும்பாக் கம்), அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல்  அங்காளம்மன் கோயில் வரை, திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரையிலான ஆட்டோ சவாரி கட்டணம் நபர்  ஒருவருக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், வேட்டவலம் தற்காலிக பேருந்து நிலையம்  முதல் திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து வரை, திருக்கோவி லூர் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோயில் வரை, மணலூர் பேட்டை சாலை முதல் அங்கா ளம்மன் கோயில் வரை, அரசு கலை கல்லூரி முதல் அங்கா ளம்மன் கோயில் வரை. திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல்  திருவள்ளுவர் சிலை வரை, திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்தி நகர் பைபாஸ் ரோடு 6 வது  குறுக்கு தெரு வரை, நல்லவன்பாளையம் முதல் அங்காள பரமேஸ்வரி கோவில் வரை, பச்சையம்மன் கோவில் முதல்  கிருஷ்ணா லாட்ஜ் வரையிலான தூரங்களுக்கு நபர் ஒரு வருக்கு தலா 20 ரூ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்  கண்ட கட்டண நிர்ணயம் மகா தீபம் 2019 க்கு மட்டுமே  பொருந்தும். இலவச பேருந்து மகா தீபத்தை முன்னிட்டு  கிரிவல பாதையில் பொதுமக்கள் நலன்கருதி பக்தர்க ளுக்கான இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தற்கா லிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவல பாதைக்கு வரு வதற்கு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதால் பொது மக்கள் அதனை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.