tamilnadu

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் முக்கிய செய்திகள்

கோபுரத்தில் தீபம் ஏற்ற முயன்ற அர்ச்சகர் மின்சாரம் தாக்கி பலி
கள்ளக்குறிச்சி,டிச.12- கள்ளக்குறிச்சியில் கோவில் கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற அர்ச்சகர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவை சேர்ந்தவர் மணிகண் டன். இவரது மகன் பெரியசாமி ( 21). கள்ளக்குறிச்சி அருகே  விடாந்தாங்கலில் உள்ள ராஜேஸ்வரி அம்மன் கோவில் அர்ச்ச கராக இருந்தார். கார்த்திகை தீபத்தையொட்டி தீபம் ஏற்ற  கோவில் கோபுரத்தின் உச்சிப் பகுதிக்கு ஏறினார். கோவி லில் கோபுரம் சீரியல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டி ருந்தது. இதனை கவனிக்காமல் பெரியசாமியின் கைவிரல் சீரியல் பல்புகள் உள்ள வயர் மீது பட்டது. இதில் மின்சாரம்  தாக்கியதில் கோபுரத்திலிருந்து பெரியசாமி கீழே விழுந்தார். இதனை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீபமலையிலிருந்து  25 அடி பள்ளத்தில்  விழுந்த சிறுவன் மீட்பு
திருவண்ணாமலை, டிச. 12- திருவண்ணாமலையில் தீபமலை மேலிருந்து 25 அடி  பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் தீயணைப்பு வீரர்களால்  மீட்கப்பட்டான். திருவண்ணாமலையில் தீபவிழாவன்று 2 ஆயிரத்து 668  அடி உயர தீபமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனை  காண்பதற்காக மாவட்ட நிர்வாகம் அனுமதியின்பேரில் 2 ஆயி ரத்து 500 பேர் எண்ணிக்கையில் மலைக்கு ஏறிச்சென்றனர்.  திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்தி ரன் என்பவரது மகன் வினோத் (14) என்ற சிறுவனும்  ஆர்வத்துடன் மலை உச்சிக்கு சென்று கொண்டிருந்தான். மலைஉச்சியை நெருங்கிய வினோத் திடீரென அருகில்  இருந்த சுமார் 25 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தான்.  இதனால் மலையேறிய மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  தீயணைப்பு வீரர்கள் அவனை மீட்டனர். இந்த சம்பவத்தில்  வினோத்துக்கு கை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. இதை யடுத்து தீயணைப்பு வீரர்கள் ஸ்டிரெச்சரில் தூக்கிக்கொண்டு அடிவாரத்துக்கு வந்தனர். அதைத்தொடர்ந்து 108 ஆம்பு லன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. இதையடுத்து வினோத்தை குடும்பத்தினர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி
விழுப்புரம், டிச.12- தனது கொலுசை அடமானம் வைத்து குடித்த கணவரை  மனைவி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே கண்டமங்கலம் மாரியம்மன் கோயில்  தெருவைச் சேர்ந்தவர்கள் செந்தில் மற்றும் சித்ரா தம்பதிகள்.  இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கொத்தனாரான செந்தில் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், சித்ராவின் கால் கொலுசை கொண்டு சென்று அடமானம் வைத்துக் குடித்துள்ளார் செந்தில். இது  சம்மந்தமாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதை அடுத்து வீட்டுக்கு வெளியே நின்ற இரு சக்கர வாகனத்தி லிருந்து பெட்ரோல் எடுத்து செந்தில் மேல் ஊற்றி கொளுத்தி யுள்ளார் சித்ரா. இதில் அவர் உடலில் தீப்பரவ பின்னர் தீயை  அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்த்துள்ளார். அங்கு செந்திலுக்கு சிகிச்சை நடக்க காவல்துறையினர் சித்ராவை கைது செய்துள்ளனர்.