tamilnadu

img

சிபிஎம் நடைபயணம் வெற்றி: மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதி

உளுந்தூர்பேட்டை. டிச, 4-  கள்ளக்குறிச்சி மாவட்டம் திரு நாவலூர் ஒன்றியம் நகர் கிரா மத்தின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற நடைபயண போராட்டம் அதி காரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது. குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஆழ்துளை கிணற்றுக்கு போர்வெல் அமைத்து தரவேண்டும், நகர் காலனி பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு சுற்றுச் சுவர் மேல் மூடி  அமைத்து தர வேண்டும், வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்த  அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், நகர் காலனியில் பழுத டைந்துள்ள அங்கன்வாடி கட்டிடத் திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். நகர் கிராமத்தில் உள்ள சமு தாயக்கூடம், ரேஷன் கடை கட்டிடம்,  மகளிர் சுகாதார வளாகம் ஆகிய வற்றை பழுது நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த  நடைபயணம் நகர் கிராமத்தில்  துவங்கி உளுந்தூர்பேட்டை வட்டாட் சியர் அலுவலகத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்டிருந்தது. புதன்கிழமை(டிச.4) காலை 10 மணிக்கு நடை பயணம் துவங்கிய நிலையில் உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் விஜய குமார், திருநாவலூர் துணை வட்டார  வளர்ச்சி அலுவலர், உள்ளிட்ட அதி காரிகள் போராட்டம் துவங்கிய இடத்திற்கே வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அங்கன்வாடி கட்டி டத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டித் தரப்படும், காலனி பகுதியில் உள்ள திறந்தவெளி குடிநீர் கிணற்றுக்கு சுற்றுச் சுவரும், மேல் முடியும் உட னடியாக அமைத்து தரப்படும். சமுதாயக்கூடம், ரேஷன் கடை கட்டிடம், மகளிர் சுயஉதவிக்கட்டிடம்  ஆகியவற்றை பழுது நீக்கிட ஏற்க னவே அரசிற்கு பரிந்துரை அனுப் பப்பட்டுள்ளதால் விரைந்து புதுப் பித்து தரப்படும், போர்வெல் அமைத்து குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது உடன்பாடு ஏற்பட்டது. இந்த நடைபயண போராட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பி னர் ஜி.ஆனந்தன், ஒன்றியச் செய லாளர் ஜெ.ஜெயகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.எஸ்.மோகன், மாவட்டக் குழு உறுப்பி னர் டி.வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.ஆறுமுகம், ஏ.எஸ்.குமார், ஜி. தாமோதரன், ஏ.குடியரசுமணி உள்  ளிட்ட ஏராளமானோர் இதில் பங் கேற்றனர். கிளைச் செயலாளர் பி. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.