tamilnadu

உளுந்தூர்பேட்டை பகுதியில் பொது அமைதியை காக்க வேண்டும் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

உளுந்தூர்பேட்டை, மார்ச் 23-  உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் மக்கள் விரோத சக்தி களால் உருவாக்கப்படும் வன்முறைகளை கட்டுப்படுத்தி பொது அமைதியை பாது காத்திட வேண்டும் என அனைத்துக் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தப்பட்டு ள்ளது. உளுந்தாண்டார்கோயில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர்களில் புரட்சியாளர் அம்பேத்கரின் உருவப்படத்தை அவமதிக்கும் வகையில் சாணி பூசிய சமூக விரோத சக்திகள் மீது நட வடிக்கை எடுத்திட உளுந்தூர்பேட்டை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதனை ஒரு சாக்காக பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு என்ற பெயரால் அம்பேத்கர் உள்ளிட்ட அனைத்து தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களையும் காவல்துறையும், பள்ளி நிர்வாகமும் இணைந்து அழித்து இருப்பது வேதனைக்குரியதோடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும். இந்த நடவடிக்கை மிகத் தவறான முன்னுதாரணமாக மாறும் அபாயம் உள்ளது.  எனவே அழிக்கப்பட்ட அனைத்து தேசிய, தேசத் தலைவர்களின் படங்களையும் வண்ணங்களில் சிறப்பாக வரையவேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர், பகுத்தறிவு பகல வன் தந்தைபெரியார் ஆகிய தலைவர்களின் திருவுருவச் சிலைகளை உளுந்தூர்பேட்டை நகரின் மையப் பகுதிகளில் நிறுவிட அரசு உரிய இடத்தை தேர்வு செய்து ஆவண செய்ய வேண்டும். அண்மைக் காலமாக சாதியத் தலைவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிறுத்தியும், சில திரைப்படங்களை கொண்டாடுவது என்கிற பெயரிலும் உழைக்கும் மக்களிடையே தேவையற்ற வெறுப்பை, பகைமையை உரு வாக்கும் முயற்சி சமூக விரோத சக்திகளால் மேற்கொள்ளப்படுவதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அரசின் கவனத்திற்கு சுட்டிக் காட்டுகிறது.  இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரங்களின் வழியாக 2013ல் தருமபுரியில் நடைபெற்ற வன்முறையைப்போல இப்பகுதியிலும் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம் அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், வணிகர் அமைப்புகள் ஆகிய வற்றின் முன்னணி பொறுப்பாளர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தையை மாவட்ட ஆட்சியர் அல்லது கோட்டாட்சியர் நடத்திட வேண்டும் என இக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.   இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் அறிவுக்கரசு, மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் க.ஜெய சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, திமுக சார்பில் ஒன்றிய செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர் பெரியசாமி மற்றும் திராவிடர் கழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.