tamilnadu

வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: உயர்மட்ட விசாரணை நடத்த சிபிஎம் கோரிக்கை

கள்ளக்குறிச்சி. ஆக. 9- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதம  மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம்  மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி வீடு  கட்டும் திட்டம் ஆகியவற்றில் தலை விரித்தாடும் ஊழல் முறைகேடுகள் மீது உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலருக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிசான் திட்டத்தில் ஒவ்வொரு மனு விற்கும் 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை  கையூட்டாக வசூலிக்கப்படுகிறது. ஒரு  குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் நிலம் உள்ள  நிலையில் குடும்பத்தில் உள்ள அனை வரையும் பயனாளிகளாக சேர்த்துள்ளனர்.

நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் இருப்ப தாக போலியான ஆவணங்களை தயாரித்து முறைகேடு நடைபெறுகிறது. சங்கராபுரம் நகரில் உள்ள ஹன்சிகா, ரிஷிவந்தியத்தில் உள்ள தமிழன், ஏவிஎம் ஆகிய பிரவுசிங் சென்டர்களிலும், உளுந்  தூர்பேட்டை நகரில் மாடல் காலனி, திரு நாவலூர் ஒன்றியத்தில் மதியனூர், மல்லிகா,  கீழக்குப்பம் வேலூர், கோட்டையாம் பாளையம் ஆகிய இடங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. முறைகேடுகள் குறித்து தகுந்த ஆதா ரங்களுடன் கள்ளக்குறிச்சி வேளாண் இணை  இயக்குனரிடம் 5 முறை சி.பி.எம். சார்பில் மனு  அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 4  தவணைகளில் பயனாளிகளுக்கு தொகை  வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால் முதல்  தவணை தொகையை மட்டும் பயனாளி களுக்கு அனுப்பிவிட்டு மீதமுள்ள மூன்று தவணை தொகைகள் அவர்களுக்கு தெரியா மலேயே கையாடல் செய்யப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் நிறைவடையாமலும், வீடுகளே கட்டப்படாமலும், பயனாளிகளின் வங்கிக் கணக்கை தவிர்த்து புதிய வங்கி  கணக்கின் மூலம் நூதன முறையில் இந்த  ஊழல் முறைகேடுகள் அனைத்து ஒன்றியங்க ளிலும் பரவலாக நடைபெறுகிறது. சங்கராபுரம் ஒன்றியம் புத்திராம்பட்டு, திருக்கோவிலூர் ஒன்றியம் எல்ராம்பட்டு, திரு நாவலூர் ஒன்றியம் வாணாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் 200 பயனாளிகளின் பெயரில் இதுபோன்ற மோசடிகள் நடந்துள்ளது ஆதாரங்களுடன் தெரிகிறது. எனவே மேற்கண்ட திட்டங்களில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகள் நடை பெற்றுள்ளது குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவ டிக்கை எடுக்க வேண்டும். தகுதியான விவ சாயிகளை வேளாண்துறை மூலம் இலவச மாக பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப் பட்ட பயனாளிகளுக்கு புதிதாக வீடுகள் அமைத்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.