tamilnadu

img

முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் விசுவாசமாக இல்லையாம் ஈஸ்வரப்பா சொல்கிறார்

பெங்களூரு, ஏப். 14 -கடந்த தேர்தலில் வளர்ச்சி.. வளர்ச்சிஎன்று கூவிய பிரதமர் மோடி முதலான அத்தனை பாஜக தலைவர்களும், தற்போது அப்பட்டமாக மதவெறி அரசியலை பேசி வருகின்றனர். அந்த வகையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான ஈஸ்வரப்பா, “முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் நாட்டிற்கு விசுவாசமாக இல்லை” என்று கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில்பேசியிருக்கும் ஈஸ்வரப்பா, பாஜகவின் “சப்கா சாத் சப்கா விகாஸ்” முழக்கம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போதுதான், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் நாட்டிற்கு விசுவாசமாக இல்லாததால், அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்புவழங்கவில்லை என்று விஷத்தைக் கக்கியுள்ளார்.

;