கர்நாடகாவில் திருமண நிகழ்வின் போது மணமகள் அணிந்திருந்த சேலை பிடிக்காததால் மணமகன் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் ஹசன் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரகு குமார். அவர் பெண்ணை காதலித்தார். இருவரின் குடும்பத்தினரும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் திருமண சடங்குகளின் போது மணப்பெண் அணிந்திருந்த புடவையின் தரம் சரியில்ல என்ற ரகுகுமாரின் பெற்றோர் அதை மாற்றும்படி கூறினர். அதற்கு மணமகள் மறுப்பு தெரிவித்தார். இதனால் ரகுகுமார் பெற்றோர் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
இதைத்தொடர்ந்து மணமகள் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் ரகுகுமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.