கர்நாடகாவில் தனியார் பேருந்து எரிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் பகுதியில் கே.ஆர் ஹல்லி தேசிய நெடுஞ்சாலையில் 32 பேருடன் சென்ற பேருந்து என்ஜின் கோளாறு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.