மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், அராஜக முறையில் போலீசார் மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. டெல்லி, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவின் மங்களூரு நகரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார், போராட்டகாரர்களை தடியடி நடத்தி விரட்டியுள்ளனர். இதனால் பலர் அருகிலிருந்த ஹைலேண்ட் மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளனர். அவர்களை விரட்டிச் சென்ற பொலீசார், மருத்துவமனை வளாகத்திற்கு அருகில் கண்ணீர்ப்புகை குண்டு வீசியுள்ளனர். பின்னர், ஐசியூ மற்றும் சிகிச்சை அறைகளின் கதவை உதைத்து அத்துமீறியுள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சைக்கு வந்தவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பொலீசார் லத்தியுடன் வருவதை கண்ட மருத்துவமனையில் இருந்த மக்கள் அச்சத்தில் ஓடியுள்ளனர். பின், போராட்டகாரர்களை பிடிக்க நோயாளிகள் சிகிக்சை பெற்று வந்த அறைகளின் கதவைகளை தாக்கி, அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை செய்துள்ளனர். போலீசார், மருத்துவமனைியல் நுழைந்து தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள், தற்போது இணையதளத்தில் பரவி உள்ளது.
கடந்த 15-ஆம் தேதி, டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலீசார் நடத்திய தாக்குதலை அடுத்து, நாடு முழுவதும் மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் போலீசார், அராஜக முறையில் மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.