குளித்தலை, செப்.22- கரூர் மாவட்டம் குளித்த லை நகராட்சி பேருந்து நிலையத்தையொட்டி உள்ள காந்தி சிலை அருகே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. ஆனால், பேருந்து எதுவும் இந்த நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஆட்சியர், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து மனு கொடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை குளித்தலை நகர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் பொதுமக்கள் உதவியுடன் அந்தப் பேருந்து நிறுத்தத்தைத் தூய்மைப்படுத்தி சீரமைத்தனர். மேலும் இனி இந்த நிறுத்தத்தில் பேருந்துகள் அனைத்தும் நின்று செல்ல வேண்டும் என்று அறிவுறு த்தினர்.