கரூர், ஆக.6- கரூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். கடந்த 8 மாத காலமாக ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கை களை ஏற்காமல், கோரிக்கைகளை கிடப்பில் போட்டுள் ளதை கண்டித்தும், மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் உட னடியாக கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழ கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்ட கல்வித்துறை அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் சரவணன் தலைமை வகித்தார். கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பொன்ஜெய ராம் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் சட்ட ஆலோசகர் ரமேஷ் வரவேற்று பேசினார். மாவட்ட நிர்வாகிகள் செல்வராணி, ஷகிலா, ஜெயராஜ், மலைக்கொழுந்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். லட்சுமணன், அமுதன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.