கரூர், பிப்.20- மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்,ஆர்.சி. குடியுரிமை சட்டத்திற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட துணை தலைவர் மளெலான சுல்தான் சையத் இப்ராகிம் தலைமை வகித்தார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அமமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் முகிய பிரதி நிதிகளும், 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்க ளும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் நிறைவில் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.