tamilnadu

img

தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

 கரூர், மே 11- ஊரடங்கால் வேலை இழந்து வறுமை நிலையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கு கரூர் மாவட்டம் க.பரமத்தி, பவித்திரம், பூப்பாளி கிராமத்தில் மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்டக் குழு சார்பில் 50 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ, அரிசி மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன், செயலாளர் கெ.சக்திவேல், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் எம்.எஸ்.அன்பழகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர்கள் மு.செல்வராணி, எல்.பாலசுப்பிரமணி, வட்டக் கிளை நிர்வாகிகள் க.அறிவழகன், என்.கோபி மற்றும் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியம், ராமசாமி கலந்து கொண்டனர்.

;