tamilnadu

img

கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் உற்பத்தி பொருட்களை தங்குதடையின்றி இறக்குமதி  செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடுவதை   கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்டம் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கே.சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.இலக்குவன் கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் நாகராஜ், பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் வீரமலை, ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.