கரூர், ஜூலை 23- ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன்(52). சுற்றுச்சூழல் ஆர்வ லரான இவர் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பா ளராக இருக்கும் இவர் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை யின் துப்பாக்கிச் சூட்டிற்கு எதிரான வீடியோ வை சென்னையில் வெளியிட்டார். பின்னர் மறுநாள் எழும்பூர் ரயில் நிலை யத்தில் இருந்து மதுரை செல்ல வந்தவர் திடீ ரென காணாமல் போனார். இதுகுறித்து தமிழ் நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லயோலாமணி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தி ருந்தார். இந்நிலையில் 142 நாட்களுக்கு பிறகு முகிலன் திருப்பதியில் கடந்த 7ம் தேதி மீட்கப்பட்டார். பின்னர் அவர் காட்பாடி ரயில் நிலையத்தில் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்த பின், போலீஸார் அவரை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண், முகிலன் மீது குளித்தலை காவல் நிலையத்தில் அளித்த பாலியல் புகாரையடுத்து அவரை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் முகிலனை கடந்த 10ம் தேதி நள்ளிரவில் கரூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட் டது. முகிலனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கரூர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக முகிலன் திங்கட் கிழமை பலத்த பாதுகாப்புடன் கரூர் நீதி மன்றத்தில் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் இருந்து நீதி மன்றத்திற்குள் அழைத்து வரப்பட்ட போது ஆவேசத்துடன், தாக்காதே, தாக்காதே சிறைக்குள் தாக்காதே, நியாயம் தானா, நியாயம் தானா சிறைக்குள் தாக்குவது நியா யம் தானா என்றும், ஐஜி சைலேஸ்குமார் யாதவை கைது செய்ய வேண்டும், அனு மதிக்காதே, அனுமதிக்காதே நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்காதே என கோஷ மிட்டப்படி வேனில் இருந்து இறங்கினார். பின்னர் நீதிபதி விஜய்கார்த்திக் முன் ஆஜர்படுத்திய போது, சிறைக்குள் தன்னை போலீஸாரும், உயர் அதிகாரிகளும் திங் கள்கிழமை காலை திடீரென நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கூறினர். அதற்கு நான் ஜூலை 24ம் தேதி தானே ஆஜர்படுத்த வேண்டும், இன்றைக்கு ஏன் அழைக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு தன்னை தாக்கி, அழைத்து வந்தனர். மேலும் இன்று என்னால் சிபிசிஐடி போலீஸாரின் விசார ணைக்கு ஒத்துழைக்க முடியாது. ஏனெனில் தமிழகத்தில் நீட் தேர்வு, சேலம் 8 வழிச் சாலை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், ராஜிவ் வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐஜி, டிஐஜி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார். இதனை கேட்டறிந்த நீதிபதி, போலீஸார் தாக்கியது, சிபிசிஐடி விசாரணைக்கு மறுப் பது குறித்து எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள் எனக் கேட்டார். இதையடுத்து முகிலன் எழுதிக் கொடுத்ததையடுத்து, நீதி பதி விஜய்கார்த்திக் விசாரணையை செவ் வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மீண்டும் ஆஜர்
சுற்றுச்சூழல் போராளி முகிலன் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் தொடர்பான வழக்கில் மூன்று நாள் கஸ்டடி கேட்டு சி.பி.சி .ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் முறையிட்ட வழக்கில் முகிலன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கென்னடி நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயந்தியுடன் கடும் வாக்கு வாதம் செய்தார். இவ்வழக்கை விசாரணை செய்த நீதி பதி விஜய்கார்த்திக் முகிலனை மூன்று மணி நேரம் செவ்வாய்க்கிழமை விசாரணை செய்து நீதிமன்றம் நேரம் முடிவதற்குள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.காவல் துறையினர் முகிலனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து முகிலனின் வழக்கறிஞர் கென்னடி செய்தியாளர்களிடம் தெரிவிக் கும் போது, இவ்வழக்கில் போலீஸ் காவல் என்பது தேவையற்ற ஒன்று என்றும், அரசு தரப்பும், அரசு எந்திரங்களும் பொய்யான பிரச்சாரத்தை செய்வதற்காக 45 நாள் கழித்து முதல் தகவல் அறிக்கை தயார் செய்து யாரையோ திருப்திப்படுத்துவதற்காக சமூக போராளியின் 25-ஆண்டு பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒருவரை காலி செய்து விடலாம் என்ற எண்ணத்தில் அவ ரது உயிருக்கும், வாழ்விற்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த போலீஸ் கஸ்டடி வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம், வாதிட்ட இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகை யில் காவல் துறையினர் கேட்ட 3 நாள் கஸ்டடிக்கு பதிலாக 3 மணி நேரம் போலீஸ் காவல் வழங்கி இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை முதலாளிகளும், இங்குள்ள ஆற்று மணலை திருடி விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்களும் வரலாற்றில் கடன் பட்டு இருக்கிறார்கள். அவர்களின் கணக்கு சட்டரீதியாக தீர்க்கப்படும் என்றார். மேலும் எந்த ஒரு கஸ்டடியிலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுக்க வேண்டியிருந்தால் மட்டுமே கஸ்டடி வழங்க வேண்டும். நீதிமன்றம் வழங்கிய உத்தரவு சட்டத்திற்கு முரணானது. நீதி நெறிகளுக்கு எதிரானது. இது குறித்து மேல் முறையீடு செய்வோம் என்றார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான சம்ப வம் குறித்து நீதிமன்றத்தில் நீதிபதியிடம் உண்மையை தெரிவிக்க மனு செய்ததின் விளைவாகவே இந்த வழக்கு ஜோடிக்கப் பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இது நீதி மன்ற விசாரணையில் இருப்பதால் அது தொடர்பாக தெரிவிப்பது சரியாகாது என்றார்.