கரூர், நவ.5- குளித்தலையில் டிராக்டர் பெற விண்ணப்பித்த விவசா யியிடம்ரூபாய் 22 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய வேளாண்மை உதவி பொறியா ளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பனிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்(40). இவர் விவசாய வேலை செய்து வரு கிறார். இவருக்கு அதே பகுதி யில் விவசாய நிலம் உள்ளது. தற்போது சுரேஷ், திருச்சி மாவட்டம், உறையூர் லிங்கம் நகரில் வசித்து வருகிறார். சுரேஷ் தனது தோட்டத்தில் விவ சாயம் செய்வதற்காக மானி யத்தில் டிராக்டர் பெற குளித்தலை பெரிய பாலம் அருகே உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியா ளர் அலுவலகத்தில் கடந்த வாரம் விண்ணப்பித்துள்ளார். அப்போது அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் மானியத்தில் டிராக்டர் வழங்க ரூபாய் 22 ஆயி ரத்து 500 லஞ்சம் கேட்டுள் ளார். இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், இதுதொடர்பாக கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் திங்கள் கிழமை புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சுரேஷிடம் கொடுத்து அனுப்பி யுள்ளனர். இதனிடையே செவ்வாய்க் கிழமை காலை சுரேஷ், ரசாய னம் தடவிய ரூபாய் நோட்டுக்க ளை உதவி செயற்பொறியாளர் கார்த்திக்கிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த கரூர் லஞ்ச ஒழிப்பு துணைக் காவல் கண்காணிப்பாளர் அண்ணா மலை தலைமையிலான போலீசார், கார்த்திக்கை கைது செய்தனர்.