tamilnadu

img

சிஐடியு சங்க நிர்வாகிகளை அவமதித்த டாஸ்மாக் மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர், மே 30- கரூர் மாவட்டம், உப்பிட மங்கலம் அருகில் உள்ள சரளப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் அரசு மது பானக் கடையில் விற்பனையா ளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா பேபி. சுரேஷ்குமாருக்கு கடந்த 2019 ம் வருடம், நவம்பர் 13ம் தேதி 4903 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடையில் விற்ப னையாளராக பணி செய்ய டாஸ்மாக் நிர்வாக மாவட்ட மேலாளர் உத்தரவிட்டார்.  இதையடுத்து சுரேஷ்குமார் மதுபான கடைக்கு சென்று தினசரி பணிப் பதிவேட்டில் கையெழுத்திட்டு பணி செய்து வந்துள்ளார். ஆனால் சுரேஷ்குமாரை விற்பனையா ளராக பணி செய்ய விடாமல் உதவியாளராகவும், வாட்ச்மேன் போலவும் பணி செய்ய  வைத்துள் ளனர். அதே அரசு மதுபான கடையில் எவ்வித உத்தரவு மின்றி, பணி நியமனமும் இன்றி, இரண்டு நபர்கள்  விற்பனையாள ராக பணி செய்து வருகின்றனர்.

சுரேஷ்குமார் கடந்த 26 ஆம் தேதி வரை பணிப் பதிவேட்டில் கையெழுத்திட்டு பணி செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி காலை பணிப் பதி வேட்டில்  கையெழுத்திட செல்லும் பொழுது டாஸ்மாக் கடையின்  சூப்பர்வைசர், மாவட்ட மேலாளர், சுரேஷ் குமாரை நேரில் சந்திக்க  வரு மாறு கூறியதாக தெரிவித்துள் ளார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடாதவாறு முடக்கி வைத்து விட்டனர். இத னையடுத்து கடந்த புதன்கிழமை சுரேஷ்குமார் அவரது மனைவி ஆகியோர் நேரடியாக டாஸ்மாக் நிர்வாக மாவட்ட மேலாளர் விஜயசண்முகத்தை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த பொழுது, ஒருமையில் பேசி தாக்குதல் நடத்தும் வகையில் மிரட்டியும் வேலையை விட்டு நீக்கி விடுவேன் என்றும் பேசி சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவியை, மேலாளர் இரு வரையும் வெளியே அனுப்பி உள் ளார். எந்தவித காரணமும் கூறாமல் வெளியே அனுப்பி உள்ளார்.

 இதைதொடர்ந்து சிஐடியு சங்க மாவட்ட  செயலாளர் சி.முரு கேசன் தலைமையில் டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் கா. கந்தசாமி, தரக்கடை வியாபாரி கள் சங்க மாவட்ட செயலாளர் தண்டபணி மற்றும் சுரேஷ்குமார் அவரது மனைவி கார்த்திக பேபி ஆகியோர் டாஸ்மாக் நிர்வாக மாவட்ட மேலாளரை சந்தித்து விளக்கம் கேட்க வெள்ளிக் கிழமை சென்றுள்ளனர். ஆனால் டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகம் சங்க மாவட்ட நிர்வா கிகளை அவமரியாதையாக பேசி, ஒருமையில் திட்டியும் அனுப்பி விட்டார். இந்த செயலை சிஐடியு சங்கம் வன்மையாக கண் டிப்பதுடன், தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசுவது அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வது இரு தரப்பிற்கு இடையில் ஒரு சுமூக நடவடிக்கை கடைபிடிக்க வழி வகை செய்யும். தொழிற் சங்கத்தின் தலைவர்களை மரியாதை இன்றி அவமதித்து பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட டாஸ்மாக் நிர்வாக மாவட்ட மேலாளர் விஜயசண்மு கத்தின் மீது உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி சனிக்கிழமை டாஸ்மாக்  மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு சிஐடியு சங்க கரூர் மாவட்ட குழு சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் சி.முருகேசன் தெரிவித்தார்.