கரூர், ஜூன் 18- கரூர் மாவட்ட சாலையோர தரைக்கடை, தள்ளு வண்டி சிறு வியாபாரிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதி உடலுழைப்புத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி யாகும் இங்கு அன்றாடம் உணவுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு பெருமளவு தேவைப் படுகிறது. இதன் காரணமாக வெங்கமேடு கொங்கு நகர் 50 அடி சாலையின் இருபுறுமும் சாலையோற வியபாரிகள் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் தினசரி சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட வியபாரிகள் வியபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊர டங்கு அமல்படுத்தப்பட்டதால் இந்த தினசரி சந்தையை கரூர் நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக மூடியது.
தற்பொழுது கரூர் மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு கள் குறைந்துள்ளதால் தற்பொழுது தினசரி சந்தை சமூக இடைவெளியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையை ஒரு சில தனி நபர்கள் தங்களது சுய நலத்திற்காக 50 அடி சாலையில் தரைக்கடை மற்றும் தள்ளு வண்டிகள் நிறுத்த முடியாத படி தடுப்புகள் அமைத்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியபாரிகளின் வாழ்வாதரத்தை அழிக்கும் வகையில் செயல்படும் இந்த ஆக்கிர மிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், தெரிலாளர்களின் வாழ்வாதரத்தை பாதுகாத்திட கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். கரூர் மாவட்ட சாலையோர தரைக்கடை, தள்ளு வண்டி சிறு வியாபாரிகள் சங்கத்தின் கரூர் மாவட்ட செய லாளர் எம்.தண்டபாணி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் சி.முருகேசன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்ட நிர்வாகிகள் சரவணன், வாசுகி, பரமேஸ்வரன், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.