கரூர், ஆக.19- கரூர் ஆட்சியர் கூட்டரங்கில் ஜல்சக்தி அபியான் திட்ட மத்திய அரசு அதிகாரிகள் தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பி னர் செந்தில்பாலாஜி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறுகையில், அமராவதி ஆற்றின் கடைமடைப் பகுதியான கரூர் மாவட்டம் தொட ர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது அது திருப்பூர் மாவட்டம் வரையிலான பயன்பாட்டிற்கு மட்டுமே திறக்கப் படுகிறது. இதனால் கரூர் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப் படுகிறார்கள். தற்போது அணை நீர்மட்டம் போதிய அளவில் உள்ளது. 2 ஆயிரம் கன அடி நீர் திறந்தால் மட்டுமே கரூர் மாவட்டத்தை அமராவதி நீர் வந்து சேரும். ஆனால் ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. இன்னும் மூன்று நாட்களில் அமராவதி நீர் விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அறப் போராட்டம் நடைபெறும் என்றார். இதே கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வலியுறுத்தினார்.