tamilnadu

இலவச வீட்டுமனைக் கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், அக்.13- இலவச வீட்டுமனை, முதியோர் ஓய்வூதியம், வீட்டு மனை பட்டா வழங் கிட வேண்டும், நூறு நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி,கூலி ரூ 400 வழங்கிட வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதி களில் அமல்படுத்திட வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க அர வக்குறிச்சி ஒன்றியக் குழு சார்பில் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். வி.தொ.ச மாவட்ட பொருளாளர் கே.வி.கணேசன், கட்டு மான சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது ஆகியோர் பேசி னர். ஒன்றிய நிர்வாகிகள் மருத முத்து, முத்துச்சாமி, பொன்மணி, பெரியசாமி, சுரேஷ், வேணுகோபால், காந்தி, வீராச்சாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து அர வக்குறிச்சி வட்டாட்சியர் அலுவல கத்தில் கோரிக்கை மனுவை அனை வரும் வழங்கினர்.