tamilnadu

img

ரயில்வே பராமரிப்பில் ஈடுபட்ட இரு ஊழியர்கள் மரணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் தண்டவாளப் பராமரிப்பில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் இருவர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் மேற்பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில்  பராமரிப்பு பணியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரு ஊழியர்கள் அம்மேம்பாலத்தின் ரயில்வே தண்டவாளத்தின் மீது அதிர்வுகளை அளவிடும் பணியை செய்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக ரயில் வந்ததை அறிந்த இருவரும் தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்கு முன்னரே இருவர் மீதும் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

;